கோவை ஆர்.எஸ்.புரத்தில் பர்னிசிங் அலுவலகத்தில் தீ விபத்து - பொருட்கள் எரிந்து சேதம்

பர்னிசிங் அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து ஏற்பட்டவுடன் ஊழியர்கள் வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் தனியாருக்கு சொந்தமான பர்னிசிங் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து சுதாரித்துக் கொண்ட பணியாளர்கள், உடனடியாக வெளியேறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



தகவலை அடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் சுதாரித்துக் கொண்டு வெளியேறியதால் பணியாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இது குறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...