கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள அன்னதான அறைக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு

கோவை வெள்ளியங்கிரி கோவில் அன்னதான அறையில் காட்டு யானை புகுந்த சம்பவம் நேற்று நடந்தது. வாழைப்பழங்கள் வீசி யானையை வெளியேற்றியுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. அடர் வனப்பகுதி என்பதால் அவ்வப்போது உணவு தேடி காட்டு யானைகள் அங்குள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கம். 

இந்நிலையில் நேற்றைய தினம் ஜூன்.13 ஒற்றை காட்டு யானை வெள்ளியங்கிரி கோவிலுக்கு உட்பட்ட அன்னதான உணவு பொருட்கள் வைக்கக்கூடி கூடத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 



இதனை அடுத்து நீண்ட நேரம் போராட்டத்துக்குப் பிறகு வாழைப்பழங்களை வீசி காட்டு யானையை அன்னதான கூடத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். 

மேலும் வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே வரும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்கவும் யானை போன்ற காட்டு மிருகங்கள் கண்ணில் தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...