தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கு இடத்தை தேர்வு செய்ய திட்டம்

கோவையில், தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தேசிய செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். மேலும் விரைவில் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.



கோவை: தமிழக வெற்றி கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்கி இல்ல காதணி நிகழ்ச்சியில், அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார்.



விழாவில் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக இலவச நடமாடும் உணவு வாகனத்தை தமிழக வெற்றிக்கழக தேசிய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏழு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளதாக கூறிய அவர், கோவை தெற்கு மாவட்டத்திலேயே இரண்டு வீடு கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கு இடத்தை நாங்கள் தேர்வு செய்து கொண்டிருப்பதாகவும், இடத்தை தேர்வு செய்த பிறகு எங்கள் தலைவருடைய கவனத்திற்கு கொண்டு சென்று அவர் எந்த இடத்தை தேர்வு செய்வாரோ அதுகுறித்து அறிவிக்கப்படும் என கூறினார். முன்னதாக விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும், தெரிவித்தார்.

நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான கேள்விக்கு எங்கள் தலைவருடன் கலந்த ஆலோசித்து அதற்குண்டான விவரங்களை தெளிவாக கூறுவோம் என பதிலளித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...