கோவையில் குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் 4,386 பேர் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் மொத்தம் 4,386 பேர் பங்கேற்றனர். 2,946 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வு மையங்களில் கடுமையான கண்காணிப்பு நடைபெற்றது.


Coimbatore: ஜூன் 16 அன்று கோவையில் நடைபெற்ற குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் 4,386 பேர் பங்கேற்றனர். மொத்தம் 7,332 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த போதிலும், 2,946 பேர் தேர்வெழுத வரவில்லை. இந்திய குடிமைப் பணிகள் தேர்வு, முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெறும்.

முதல்தாள் தேர்வு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், இரண்டாம் தாள் பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் நடைபெற்றது. தேர்வாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே தேர்வு மையத்துக்குள் வந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகு வந்த தேர்வாளர்கள், தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை.



கோவை மாவட்டத்தில் மொத்தம் 17 மையங்களில் முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. பி.எஸ்.ஜி. கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மாநில நுண் பார்வையாளர் ஆர்.செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...