கோவை சுங்கம் பைபாஸ் அருகே கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்த இரண்டு பேர் கைது

தியாகி சிவராம் நகர் ஜங்சன் அருகே கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 5 கிராம் மெத்தபிட்டமின் போதைப்பொருள், 50 கிராம் கஞ்சா, 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் கஞ்சா, போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஜூன்.18 மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் சுங்கம் பைபாஸ் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது தியாகி சிவராம் நகர் ஜங்சன் அருகே 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, அவர்களை சோதனை செய்தபோது, இருவரும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தொண்டாமுத்தூர் ஓணாபாளையத்தை சேர்ந்த வெங்காய வியாபாரி ரஷல் பிரான்சிஸ் (32), பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்தர் சிங் பங்கு (35) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 5 கிராம் மெத்தபிட்டமின் போதைப்பொருள், 50 கிராம் கஞ்சா, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...