கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உறவினர்கள் இடையே நடந்த தகராறில் ஒருவர் கொலை..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பால விநாயகர் நகர் பகுதியில், குடிபோதையில் மருதமுத்து என்பவரை அவரது உடன்பிறந்த அண்ணன் விஜய் மற்றும் நண்பர் குமரேசன் இருவரும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.


Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையம் பால விநாயகர் நகர் பகுதியில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில்மருதமுத்து என்பவரை அவரது உடன்பிறந்த அண்ணன் விஜி மற்றும் குமரேசன் ஆகிய இருவரும் குடிபோதையில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பால விநாயகர் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் 41 வயதான மருதமுத்து. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டு எதிரில் உள்ள இவரது அண்ணன் விஜய்யின் மனைவி சித்ரா என்பவரிடம் வெளியில் பொதுவாக உள்ள பாத்ரூம் யாரும் யூஸ் பண்ண கூடாது என்று குடிபோதையில் திட்டி உள்ளார்.

பின்னர் தனது வீட்டின் முன்பு மருதமுத்து உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தபோது எதிரில் உள்ள அவரது அண்ணன் மனைவி சித்ரா வாசல் கூட்டியபோது அவரது சாப்பாட்டில் மண் விழுந்ததால் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டபோது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த அவரது அண்ணன் மகன் ரோஷன் என்பவரை மருதமுத்து கட்டையால் அடித்தும் உள்ளார்.

இதையடுத்து மருதமுத்துவின் அம்மா லட்சுமி தனது பெரிய மகன் விஜய்க்கு போன் மூலம் தகவல் சொன்னதின் பெயரில் குடிபோதையில் ஆட்டோவில் வந்த விஜய் மற்றும் அவரது நண்பர் குமரேசன் ஆகிய இருவரும் சேர்ந்து மருதமுத்து வீட்டினுள் சென்று கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் மருதமுத்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். தகவல் அறிந்து பெரியநாயக்கன்பாளையம் ஆய்வாளர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்து வருகிறார். தப்பி ஓடிய விஜய் மற்றும் குமரேசன் ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...