பல்லடம் அருகே சின்னக்காளிபாளையத்தில் முறைகேடாக செயல்பட்ட கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு சீல்

சின்னக்காளிபாளையத்தில் முறைகேடாக செயல்பட்ட கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். டாக்டர் மெர்சல் மகேஷ் ஆண்டனி, லிட்டில் ப்ளோரா, மெடிக்கலில் வேலை பார்த்து வந்த நளினி ஆகியோர் வருகிற 21ம் தேதி ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்காளிபாளையத்தில் முறைகேடாக கிளினிக் மற்றும் மருந்தகங்கள் செயல்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி, பல்லடம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா லட்சுமி, அலுவலக கண்காணிப்பாளர் ஹரி கோபால கிருஷ்ணன் மற்றும் இளநிலை உதவியாளர் ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர், திருப்பூர் இடுவாய், சின்னக்காளிப்பாளையம் பகுதியில் உள்ள கிளினிக் மற்றும் மருந்தகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் இருந்த கிளினிக்கில் டாக்டர் மார்சல் முகேஷ் ஆண்டனி எம்.பி.பி.எஸ். என்ற மருத்துவரின் பெயர் பலகையில் இருந்தது. ஆனால் அங்கு வரும் நோயாளிகளுக்கு உரிய கல்வி தகுதி இல்லாத அதே இடத்தில் இருந்த மருந்தக உரிமையாளர் லிட்டில் ப்ளோரா என்பவர் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.



இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் கேட்டனர். அப்போது லிட்டில் ப்ளோரா என்பவர் தான் சிகிச்சை அளித்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், டாக்டர் மார்சல் முகேஷ் ஆண்டனி என்பவரை தொடர்பு கொண்ட போது தான் அங்கு வருவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து முறைகேடாக செயல்பட்ட கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும் இது சம்பந்தமாக டாக்டர் மெர்சல் மகேஷ் ஆண்டனி, லிட்டில் ப்ளோரா, மெடிக்கலில் வேலை பார்த்து வந்த நளினி ஆகியோரை வருகிற 21-ம் தேதி தகுந்த ஆதாரங்களுடன் இணை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...