டி.சி. தர ரூ.1½ லட்சம் கேட்கும் எஸ்என்எஸ் கல்லூரி நிர்வாகம் - பாதிக்கப்பட்ட மாணவன் கோவை ஆட்சியரிடம் புகார்

கோவில்பாளையத்தில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரி நிர்வாகம், டி.சி. வேண்டுமென்றால் ரூ.1½ லட்சம் தர வேண்டும் என்று கேட்பதாக பாதிக்கப்பட்ட வைஷ்ணவ் மாணவர் கோவை ஆட்சியரிடம் தந்தையுடன் சென்று மனு அளித்துள்ளார்.



கோவை: கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவ். இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் (SNS) பி.டெக் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அதே கல்லூரியில் பயிலும் சக மாணவர்களான யாசின், ஹபின், ரிசில், லிதின் ஆகியோர் தாக்குதல் நடத்தியதாக கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான வைஷ்ணவ் தொடர்ந்து கல்லூரியில் பயில விருப்பம் இல்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து கல்லூரி நிர்வாகத்திடம் மாற்று சான்றிதழ் வழங்குமாறு கேட்டதாகவும், மீதம் உள்ள மூன்று ஆண்டுகளுக்கான 1,27,000 ரூபாய் பணத்தை செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் வழங்க முடியும் என கல்லூரி நிர்வாக தெதிவித்ததாக கூறப்படுகிறது.

ஒரு மாதம் கடந்த நிலையில் நேற்று மாற்று சான்றிதழ் பெற சென்றபோது கல்லூரியின் முதல்வர் மற்றும் டீன் தனியாக அழைத்து சென்று வரும் கல்வி ஆண்டுகளுக்கான பணத்தை செலுத்தினால் மட்டுமே மாற்று சான்றிதழ் வழங்க முடியும் எனவும், இது தொடர்பாக போர்டு மீட்டிங் பின்னரே முடிவு செய்ய முடியும் எனவும், தாக்குதல் நடத்திய மாணவர்களின் பெற்றோருடன் விசாரணைக்கு பின் சான்றிதழ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளனர்.

தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்துவதுடன் அதிகார தோரணையுடன் நடந்து கொள்ளும் கல்லூரி நிர்வாகம், டீன் மற்றும் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கபட்ட மாணவன் வைஷ்ணவ், தந்தையுடன் இன்று ஜூன்.19 மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...