கோவையில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் - மதுக்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஜூன் 19ம் தேதி தொடங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.



கோவை: கோவை, மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தைமாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று ஜூன்.19 தொடங்கி வைத்து பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகள் மேற்கொண்டார். 

மேலும் அப்பகுதி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக மனுக்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.



மேலும் பள்ளிகளுக்கு செல்லாமல் இருந்த மாணவர்களிடமும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்வி படிக்காமல் இருந்த மாணவ மாணவிகள் இடமும் நேரடியாக வீடுகளுக்கே சென்று அது குறித்து கேட்டறிந்து அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து மதுக்கரை நகராட்சி அலுவலக கட்டுமான பணிகள் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் நிர்வாகக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். 



மேலும் மதுக்கரை அரசு பள்ளியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் மாணவர்களின் வருகை குறித்தும் பள்ளியில் இடையில் நின்ற மாணவர்களின் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்கு 6000 ரூபாய் மதிப்பிலான காதொலி கருவியினை வழங்கி 20 பயனாளர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...