கோவை இரயில் நிலையம் சாலையில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய பேருந்துக்கு ரூ.2000 அபராதம்

கோவை இரயில் நிலையம் சாலையில் நோ பார்க்கிங்கில் நின்ற ஹரிஹரசுதன் என்ற தனியார் பேருந்துக்கு போக்குவரத்து போலீசார் ரூ.2000 அபராதம் விதித்தனர். அபராதத்தை கட்டியப்பிறகு பேருந்தை ஓட்டுநர் எடுத்துச் சென்றார்.


கோவை: கோவை ரயில் நிலையம் சாலை மிகவும் பிரதான சாலை. அப்பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வது வழக்கம். அதனைத் தொடர்ந்து ரயில் நிலையம் அருகே கணுவாய், சோமனூர் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே போதிய பேருந்து நிறுத்த வசதி இல்லாததால் பேருந்துகள் சாலையில் நிறுத்தப்படுவது வழக்கம். ஒரு சில பேருந்துகள் சாலை விதிகளை மீறி நிறுத்துவதால் ரயில் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.



இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே நகர பேருந்துகள் அனைத்தும் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு உடனடியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டும். இந்த நிலையில் ஹரிஹரசுதன் என்ற தனியார் பயணிகள் பெருந்தான 11 ஆம் நம்பர் வண்டி கணுவாய் ரயில் நிலையம் செல்கிறது.



இந்த பேருந்து இன்று ஜூன்.20 கோவை இரயில் நிலையம் சாலையில் நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தியதால் போக்குவரத்து போலீசார் வாகனத்தின் முன் பக்க சக்கரத்தில் பூட்டு போட்டு பின்னர், 2000 ரூபாய் அபராதம் விதித்தனர். உடனடியாக நடத்துனர் 2000 ரூபாயை கட்டி விட்டு வாகனத்தை எடுத்துச் சென்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...