கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் உயர்வு

கோவை சிறுவாணி அணையில் நீர்மட்டம் கூடுதலாக 9.45 அடியாக உயர்ந்துள்ளது; தென்மேற்கு பருவமழையினால் நீர்வரத்து அதிகரிப்பு.


கோவை: கோவை மாநகரில் 26 வாா்டுகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட நகரையொட்டியுள்ள கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஐனவரி, பிப்ரவரி மாதங்களில் 20 அடிக்கும் அதிகமாக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம், கடும் வெயில் காரணமாக மாா்ச், ஏப்ரல் மாதங்களில் 8 அடிக்கும் குறைவாக சரிந்தது. இந்நிலையில், கடந்த மே மாதத்தில் பெய்த தொடா்மழையால், அணையின் நீா்மட்டம் 10 அடிக்கும் மேல் உயா்ந்தது. அதன் பிறகு, மழை இல்லாததால், அணையின் நீா்மட்டம் மீண்டும் 9 அடிக்கும் கீழ் குறைந்தது. 

இந்நிலையில், கேரளப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதி மற்றும் அடிவாரப் பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை பெய்துவருவதால் அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. அதன்படி ஜூன்.20 நிலவரப்படி சிறுவாணி நீா்மட்டம் 9.45 அடியாக உள்ளது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...