உலக யோகா தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் யோகா நிகழ்ச்சி

பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 100 மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக வந்து அமர்ந்து பத்தாவது உலக யோகா தினத்தை குறிக்கும் வகையில் "YOGA 10" என்ற எழுத்து அமைப்பு வடிவில் அமர்ந்து பத்மாசனம் செய்து அசத்தினர்.


கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 100 மாணவர்கள் "YOGA 10" என்ற வடிவில் அமர்ந்து பத்மாசனம் செய்தனர். சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி யோகாசனத்தில் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஒன்றாக யோகா செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த யோகா நிகழ்ச்சியில் 100 மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக வந்து அமர்ந்து பத்தாவது உலக யோகா தினத்தை குறிக்கும் வகையில் "YOGA 10" என்ற எழுத்து அமைப்பு வடிவில் அமர்ந்து மாணவர்கள் பத்மாசனம் செய்து அசத்தினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...