தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பிறந்த நாள் – தாராபுரம் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் முகாம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததானம் முகாமில் நிர்வாகிகள் ரத்தம் தானம் செய்தனர். இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களையும் அவர்கள் வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தாராபுரம் தொகுதி பொறுப்பாளர் கவுண்டச்சி புதூர் தலைவர் செல்வி ரமேஷ் தலைமையில் 50 பேர் ரத்தம் தானம் வழங்கினர்.

ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் சொர்க்கம் ரமேஷ், திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ், திருப்பூர் இளைஞரணி தலைவர் ஷேக் பரித், நகரத் தலைவர் சார்லி விக்டர், நகர இளைஞரணி தலைவர் கதிர் தொழிலாளர் அணி தலைவர் ஹரிஹர சுதன், தொழிற்சங்க அணி ஸ்ரீகாந்த், தொண்டரணி பிரபு, மாணவரணி எழில் பிரபாகரன் உள்ளிட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் இரத்ததான முகாமில் ரத்தம் வழங்கினார்.



முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவர் கௌதம் முதல் முறையாக தளபதியின் பிறந்தநாள் அன்று ரத்தம் தானம் செய்வேன் என்று உறுதியற்றார். மேலும் தாராபுரம் நகர் பகுதியில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு மதிய உணவு, இலவச கண் சிகிச்சை மற்றும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை நிர்வாகிகள் வழங்கினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...