கோவையில் இல்லந்தோறும் திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பீளமேடு பகுதி-2, 28வது வார்டு, ஆவாரம்பாளையம், தெற்கு வீதி, படாளம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., முன்னிலையில் இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.



கோவை: தமிழக முதலமைச்சர், திமுக கழகத் தலைவரின் கரத்தை வலுப்படுத்த, கழக இளைஞரணிச் செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தலைமையில், இல்லந்தோறும் இளைஞர் அணி "உறுப்பினர் சேர்க்கை முகாம் தமிழ்நாடெங்கும் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், கோவை மாநகர் மாவட்டத்தில் ஏற்கனவே "இல்லந்தோறும் இளைஞர் அணி"உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் இன்று (24-6-2024), திங்கட்கிழமை காலை, பீளமேடு பகுதி-2, 28வது வார்டு, ஆவாரம்பாளையம், தெற்கு வீதி, படாளம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., முன்னிலையில் கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பில், கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனபால் மேற்பார்வையில், பீளமேடு பகுதி-2 செயலாளர் நாகராஜ் தலைமையில் 28வது வட்டக் கழகச் செயலாளர் மோகன்ராஜ் முன்னிலையில், இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.



இதில் மாநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் லாரா பிரேம் தேவ், க.மணிகண்டன், கோவை அருண்,துரைபிரவீண், இப்னு மசூது, வட்டக் கழகச் செயலாளர் எஸ்.ஜே.தாஸ், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...