கோவையில் மிதமான பூகம்பத்தினால் எளிதில் பாதிக்கக்கூடிய பகுதிகள் அதிகம் - அண்ணா பல்கலை ஆய்வில் தகவல்

கோவை தெற்கு பகுதியில் உள்ள நொய்யல் நதி, உக்கடம் குளம் மற்றும் சங்கனூர் ஓடை ஆகிய பகுதிகள் பூகம்ப பாதிப்பு உள்ள பகுதிகள் என்று அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.



கோவை: கோவை மற்றும் சேலம் மாநகரங்களில் உள்ள சுமார் 80% பகுதிகள் மிதமான பூகம்பத்தினால் எளிதில் பாதிப்பு அடையக்கூடியவை என்பது அண்ணா பல்கலைகழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழக அரசின் நில அதிர்வு அபாய மதிப்பீடு பணிகளில் ஒன்றாக, 'Seismic Hazard Assessment and Microzonation of Salem and Coimbatore Cities' என்ற பெயரில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. அதில் மிதமான பூகம்ப பாதிப்பு உள்ள பகுதிகள் கோவை தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் உள்ளது. கோவை தெற்கு பகுதியை பொறுத்தவரை பூகம்ப பாதிப்பு உள்ள பகுதிகள் நொய்யல் நதி, உக்கடம் குளம் மற்றும் சங்கனூர் ஓடை ஆகிய பகுதிகளை சுற்றிஅமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களில் எவையெல்லாம் பாதிக்கப்படக்கூடியவையாக இருக்கின்றதோஅந்தகட்டிடங்களை மறுசீரமைப்பது அவசியம் எனவும், அதை செய்தால் தான் பூகம்பம் ஏற்பட்டால் அப்போது பாதிப்பு குறைவானதாக இருக்கும் என்றும், இனி கட்டப்படும் கட்டிடங்கள் பூகம்பங்களை எதிர்கொள்ளும் தன்மை கொண்டவையாக வடிவமைக்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...