பொள்ளாச்சி கள்ள சந்தையில் 1,382 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் - 9 பேர் கைது

கைது செய்யப்பட ஒன்பது பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் அவர்களை நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்றனர்.



Coimbatore: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 57 பேர் உயிரிழந்தனர்.இதை அடுத்து தமிழகம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி கேரளா மாநில எல்லை அருகில் அமைந்திருப்பதால் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் கடந்த இரு நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.



கடந்த 22 ம் தேதிஆர் பொன்னாபுரம் பிரிவில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட வெளி மாநில 822 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட செந்தில்குமார், விக்னேஷ் பிரபு, ஆனந்த் குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து வெளிமாநில மது பாட்டில்களை கடந்தி வந்து பொள்ளாச்சியில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்ததும், இதில் பல பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.



விசாரணையை தீவிரப்படுத்திய மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், பொள்ளாச்சி ராம் நகர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 500 வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மது பாட்டிலில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்த, விஜய், முருகன், முத்துப்பாண்டி, கார்த்தி, முகமது யாசிப்,சிவா உள்ளிட்ட ஒன்பது பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பொள்ளாச்சிநீதித்துறை நடுவர்நீதிமன்றம் - 1 ல் ஆஜர் படுத்தினர். கைது செய்யப்பட ஒன்பது பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் அவர்களை நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...