ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க ஒப்புதல் - கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் நன்றி

ஒண்டிப்புதூரில் 20.72 ஏக்கர் நிலத்தில், "சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் முடிவிற்கு ஒப்புதல் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.



கோவை: தமிழ்நாடு முதலமைச்சர், திமுக கழகத் தலைவர் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணிச் செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி, ஒண்டிப்புதூரில் 20.72 ஏக்கர்நிலத்தில், "சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் முடிவிற்கு ஒப்புதல் வழங்கியமைக்கும், கோவையில் அறிவியல் மேதை அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாயில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், இளைஞர்களின் இதய ஏந்தல், இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம், கழக இளைஞரணிச் செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கும் நன்றி என்று கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பிலும், கோவை மாவட்ட பொதுமக்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் சார்பில் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தனது முகநூல் பக்கத்தில் இன்று வீடியோ ஒன்றை ஜூன்.25 பதிவிட்டுள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...