கோவையில் வளர்ச்சி திட்டப்பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் ஆய்வு

சங்கனூர் பள்ளம் மேம்படுத்தும் பணி, உக்கடம் பெரிய குளத்தில் மழைக்காலங்களில் உபரிநீர் வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மதகுகளின் செயல்பாடுகள், பயணியர் நிழற்குடை அமைய உள்ள இடம் ஆகிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் ஆய்வு நடத்தினார்.



கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சங்கனூர் பள்ளம் ரூ.49 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (25.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர், மத்திய மண்டலத்திற்குட்பட்ட கண்ணப்பன் நகர், காந்திபுரம் 7-வது வீதி தொடர்ச்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் சங்கனூர் பள்ளம் மேம்பாட்டு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, உக்கடம் பெரிய குளத்தில் மழைக்காலங்களில் உபரிநீர் வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மதகுகளின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையம் எதிர்புறம் கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி நோக்கி செல்லும் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் பயணியர் நிழற்குடை அமைய உள்ள இடத்தினையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வுகளின்போது, மத்திய மண்டலத்தலைவர் மீனாலோகு, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், மாநகர துணை தலைமை பொறியாளர் முருகேசன், மண்டல உதவி ஆணையர்கள் செந்தில்குமரன், சந்தியா, இளங்கோவன், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...