சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு - கோவையில் விவசாயிகள் சங்க தலைவர் வரவேற்பு

சாதி வேறுபாடின்றி, பொருளாதாரம், கல்வி, மருத்துவம், முன்னேற்றம், ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், நீண்ட காலமாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த கோரிக்கை ஒரு தீர்வு காண்கின்ற வகையில் தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிப்பை வரவேற்பதாக கூறினார்.

இதை வைத்துக்கொண்டு அரசியல் ரீதியாக அல்லது மக்களிடத்தில் பிரிவினையை, ஏற்படுத்தக்கூடிய சில நபர்களும் இருப்பதாக கூறிய அவர், சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்துள்ளதால், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த சாதி வாரி கணக்கெடுப்பு, ஏற்ற தாழ்வு இல்லாமல், சாதி வேறுபாடின்றி, பொருளாதாரம், கல்வி, மருத்துவம், முன்னேற்றம், ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த கணக்கெடுப்பிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறிய அவர், இந்த முயற்சிக்கு தமிழ்நாடு விவசாய சங்கம் முழுமையான வரவேற்பை வழங்குவதாக தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...