அங்கீகாரம் பெறாமல் நடத்தினால் மாற்றுத்திறனாளிகள் பயிற்சி மையங்கள் மீது நடவடிக்கை - கோவை ஆட்சியர் எச்சரிக்கை

மாற்றுத்திறனாளிக்கான பயிற்சி மையங்கள், சிறப்பு பள்ளிகள், அறிவுசார் குறைபாடுடைய இல்லங்கள், மனநல காப்பகங்கள் பதிவுச்சான்று அல்லது அங்கீகாரம் பெறாமல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான பயிற்சி மையங்கள், சிறப்பு பள்ளிகள் மற்றும் அறிவுசார் குறைபாடுடைய இல்லங்கள், மனநல காப்பகங்கள் பதிவுச்சான்று அல்லது அங்கீகாரம் பெறாமல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று ஜூன்.26 வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக கல்வி அளித்தல், இயன்முறை தொழிற்பயிற்சி அளித்தல் மற்றும் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை அரசு சாரா நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ன்படி பதிவுச்சான்று மற்றும் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகிறது.

சட்டத்தின்படி, பதிவுச்சான்று மற்றும் அங்கீகாரம் நிறுவனங்கள் ஒருமாத காலத்திற்குள் இதுநாள் வரையில் மேற்கண்ட பெறாமல் இயங்கி வரும் அரசு சாரா அங்கீகாரம் பெறவில்லையென்றால் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு சாரா நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்கள் அடங்கிய கருத்துருவை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து அரசு அங்கீகாரம் மற்றும் பதிவுச்சான்று உடன் பெற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...