கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கிழக்கு மண்டலம் வார்டு எண்.66க்குட்பட்ட இராமநாதபுரம் சிக்னல், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார். சாலை ஓரங்களில் படிந்துள்ள மண்களை அகற்றி, குடிநீர் திட்டப் பணிகளை உடனடியாக முடித்திட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (27.06.2024 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி கிழக்கு மண்டலம் வார்டு எண்.66க்குட்பட்ட இராமநாதபுரம் சிக்னல், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சாலை ஓரங்களில் படிந்துள்ள மண்களை அகற்றி, குடிநீர் திட்டப் பணிகளை உடனடியாக செய்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



மேலும், மாநகராட்சி ஆணையாளர், ஒண்டிபுதூர் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வடக்கு மண்டலத்திற்குட்பட்ட காந்தி மாநகர் அருகில் அமைந்துள்ள உணவு தானிய சேமிப்புக் கிடங்கு (FCI Godown) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயரமான வேகத்தடைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வேகத்தடையின் உயரத்தினை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.62க்குட்பட்ட கொங்கு நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் புதிய திட்டப்பணிகள் அமைப்பது தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கிழக்கு மண்டலம் ஒண்டிபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மற்றும் திருச்சி சாலை இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் முரளிகுமார், உதவி ஆணையர்கள் கவிதா, செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர்கள் ஹேமலதா, ராஜேஸ்கண்ணா, எழில், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி பொறியாளர்கள், சூயஸ் நிறுவன அலுவலர்கள், உணவு தானிய சேமிப்பு கிடங்கு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...