கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான மாதாந்திர வங்கியாளர்கள் கூட்டம்

2024-2025ஆம் வருடத்திற்கான கடன் திட்டத்தில் விவசாயத்திற்கு ரூ.26,789 கோடியும், சிறு குறு நடுத்தர தொழில் மையத்திற்கு ரூ.35.661 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.2231 கோடி என மொத்தம் ரூ.64,682 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான மாதாந்திர வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று ஜூன்.27 நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான கோயம்புத்தூர் மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட (ACP) புத்தகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் திருமலா ராவ், கனரா வங்கி முதுநிலை மேலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் சண்முகசிவா, தாட்கோ மாவட்ட மேலாளர் மகேஸ்வரி, மற்றும் அனைத்து வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது.அதனடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் 2024-2025 ஆம் வருடத்தில் ரூ.64,682 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டமானது நபார்டு வங்கியின் உத்தேச கடன் இலக்கை ஆதாராமாய் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

2024-2025ஆம் வருடத்திற்கான கடன் திட்டத்தில் விவசாயத்திற்கு ரூ.26,789 கோடியும், சிறு குறு நடுத்தர தொழில் மையத்திற்கு ரூ.35.661 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.2231 கோடி என ஆக மொத்தம் ரூ.64,682 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.17,053 கோடி அதிகம் என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கு ரூ.149 இலட்சம் கல்வி கடன் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...