கனமழை காரணமாக நொய்யல் பேரூர் படித்துறையில் நீர்வரத்து அதிகரிப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி

மழையால் பேரூர் படித்துறையில் எட்டு மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஐந்து படிக்கட்டுகள் மூழ்கியடி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. ஆற்றில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை, குப்பைகளை, துணிகளை வீசக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


கோவை: மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருகின்றது.



இதனால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்ற நிலையில், கோவை நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செந்நீராக மழை நீர் ஆற்றில் ஓடுகின்றது. இதனால் தண்ணீர் வராத பல்வேறு இடங்களிலும் தண்ணீர் வர ஆரம்பித்து இருக்கிறது.

நொய்யல் ஆற்றின் மிக முக்கியமான பகுதியான பேரூர் படித்துறையில் கடந்த எட்டு மாதங்களாக பெரிய அளவிலான நீர் வரத்து இல்லை. நொய்யல் ஆறு வறண்டது. இதனால் தர்ப்பணம் தருவோர் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருந்தனர். பேரூர் ஆற்றில் வெள்ளம் இல்லாததால் அருகாமையில் உள்ள விவசாய நிலங்களுக்கு போதுமான பாசனமும், கால்நடைகளுக்கு தண்ணீரும் இல்லாமல் இருந்தன.



இந்த நிலையிலே கடந்த ஒரு வார காலமாக பொழிந்து வரும் மழையினால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு, நொய்யல் பேரூர் படித்துறையிலும் ஓடுகிறது. ஐந்து படிக்கட்டுகள் மூழ்கி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. பொதுமக்கள் இதில் பிளாஸ்டிக் பொருட்களை, குப்பைகளை, துணிகளை வீசக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

வெள்ளம் வேகமாக செல்லும் பகுதிகளில் இறங்கவோ, குளிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என அதிகாரிகள் வலியுறுத்தினர். தர்ப்பணம் தருவோருக்கு தண்ணீர் அவசியம் என்ற நிலையில், ஆடி அமாவாசைக்கு தற்பொழுது வரும் வெள்ளம் போதுமானதாக இருக்கும் என புரோகிதர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர். வறட்சி நீங்கும் விதமாக தொடர்ந்து மழை பொழியும் நிலையில், அதனை ரசிப்பதாகவும், நீர் நிலைகளில் போதுமானதாக பாதுகாப்புடன் இருக்க வேண்டுமெனவும், அப்பகுதியில் அதிகாரிகள் அறிவுறுத்தியதனை அப்பகுதி மக்கள் நினைவுகூர்ந்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...