கோவை அவினாசி சாலையில் போக்குவரத்து மாற்றம்

கோவை அவினாசி சாலையில் மேம்பால பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாற்றப்பட்ட பாதைகளை பயன்படுத்தி வாகனங்கள் அவினாசி சாலையை அடையலாம்.


கோவை: கோவை மாநகர போக்குவரத்து போலீசார் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அவினாசி ரோடு மேம்பாலப் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அண்ணா சிலையிலிருந்து அவினாசி ரோடு செல்லக்கூடிய வாகனங்கள் லட்சுமி மில் சந்திப்பிலிருந்து வலதுபுறமாக திரும்பி புலியகுளம் வழியாக இராமநாதபுரம் சந்திப்பில் இடது புறமாக திரும்பி திருச்சி ரோடு வழியாக அவினாசி சாலையை சென்றடையலாம்.

அவினாசி சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் பயனியர் மில் வழியாக இடது புறமாக திரும்பி இரயில்வே மேம்பாலம் வழியாக காந்தி மாநகர் சென்று தண்ணீர் பந்தல் எஸ் பெண்ட் வழியாக டைடல் பார்க் சென்று அவினாசி ரோட்டை அடையலாம் அல்லது கொடிசியா வழியாக அல்லது காளப்பட்டி வழியாக அவினாசி சாலையை சென்றடையலாம்.

சிங்காநல்லூரிலிருந்து அவினாசி ரோடு செல்பவர்கள் காமராஜர் சாலை வழியாக செல்லாமல் சிங்காநல்லூர் சந்திப்பிலிருந்து ஒண்டிப்புதூர், L&T பைபாஸ் சாலை வழியாக அவினாசி சாலையை சென்றடையலாம்.

வாகனங்களைப் பயன்படுத்துவோர் சத்தி சாலை மற்றும் திருச்சி சாலையைப் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்தி அவினாசி சாலையில் பீளமேடு, ஹோப்ஸ் காலேஜ் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...