உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில் இரத்த தானம் முகாம்

வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில், மத்திய பண்ணை வளாகத்தில் நடைபெற்ற இரத்த தானம் முகாமில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்தனர்.


கோவை: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ம் தேதி அன்று உலக இரத்ததான தினம் அனுசரிக்கப்படுகிறது. பொள்ளாச்சியில் உள்ள வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில், மத்திய பண்ணை வளாகத்தில், ஜூன் 14ம் தேதி அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.



இந்த முகாமை, வாணவராயர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் G.தாமோதரன் மற்றும் முனைவர் N.நவீன், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்தனர்.



இம்முகாமில், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இதர மாணவர்களில் சுமார் 50 பேர் மற்றும் கல்லூரியின் 10 பேராசிரியர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.



இதன் மூலம் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்வதோடு சமூக நலனில் தங்களுக்கு உள்ள பங்களிப்பையும் பதிவு செய்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...