கோவையில் ஜூலை 10-ஆம் தேதி ஈ.எஸ்.ஐ.சி சுவிதா சமகம் கூட்டம்

ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) ஜூலை 10, 2024 அன்று கோவை துணை பிராந்திய அலுவலகத்தில் சுவிதா சமகம் கூட்டத்தை நடத்துகிறது. மருத்துவம் மற்றும் பண பலன்கள் தொடர்பான குறைகளை தீர்க்க அழைப்பு.


கோவை: ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) ஜூலை 10, 2024 அன்று மாலை 3 மணிக்கு கோவை துணை பிராந்திய அலுவலகத்தில் சுவிதா சமகம் கூட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ESIC வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த காப்பீடு செய்யப்பட்ட நபர்கள், சார்ந்தவர்கள், முதலாளிகள் ஆகியோர் மருத்துவம் மற்றும் பண பலன்கள் தொடர்பான எந்தவொரு குறைகளையும் கொண்டிருந்தால், அவற்றை விரைவாக தீர்க்க இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை அன்று கோவை ESIC துணை பிராந்திய அலுவலகத்திலும், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று அந்தந்த கிளை அலுவலகங்களிலும் சுவிதா சமகம் நடத்தப்படுகிறது. விடுமுறை நாளாக இருந்தால், அடுத்த வேலை நாளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விளக்கங்கள் அல்லது குறைகளுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ, CPGRAMS இணையதளம் வழியாகவோ அல்லது 0422-2362329 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...