கிணத்துக்கடவு அருகே டிரைவர் கழுத்தை அறுத்து கொலை: போலீஸ் விசாரணை

கோவை சுந்தராபுரம் டிரைவர் பிரபாகரன் வடசித்தூர் செட்டிபாளையம் ரோட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் நடந்துள்ளது. ஒரு டிரைவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் (32) என்பவர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இன்று காலை அடையாளம் தெரியாத இருவர் வாடகைக்கு வண்டி வேண்டும் என கூறி அவரை அழைத்துச் சென்றனர்.

வடசித்தூர் செட்டிபாளையம் ரோட்டில் செல்லும் போது, திடீரென அந்த இரு நபர்களும் பிரபாகரனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.



நடுவழியில் நீண்ட நேரமாக சரக்கு வாகனம் நின்றதால் சந்தேகமடைந்த வழிப்போக்கர்கள் சிலர், வாகனத்தை எட்டிப் பார்த்தபோது பிரபாகரன் கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...