கோவையில் மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்த மனைவி: கணவருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவையில் மருத்துவ அலட்சியத்தால் மனைவி உயிரிழந்த வழக்கில், கணவருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Coimbatore: கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த தமிழக மின் வாரிய உதவிப் பொறியாளர் சாய் பிரேமனின் (45) மனைவி ராஜலட்சுமி (43), 2018 ஜனவரி 8-ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கி தாடை எலும்பில் சிறு விரிசல் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ரத்தம் செலுத்தப்பட்ட பின் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.

உடற்கூராய்வின் போது, ராஜலட்சுமிக்கு செலுத்தப்பட்ட ரத்தம் அவரின் உடலுக்கு பொருந்தாமல் இருந்ததும், நுரையீரல் காயமடைந்து அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. மருத்துவ அலட்சியம் காரணமாக மனைவி உயிரிழந்ததாக கூறி, சாய் பிரேமன் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மாவட்ட குறைதீர் ஆணையத் தலைவர் தங்கவேல், உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. விசாரணையின் முடிவில், மருத்துவமனை நிர்வாகமும் மருத்துவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச பணிகளைச் செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்டதாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ராஜலட்சுமியின் கணவருக்கு மருத்துவர்கள் அருண்குமார், தமிழ்செல்வன், ஆண்டனி, பாலசந்தர் ஆகியோர் சேர்ந்து ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஜூலை 5-ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பு மருத்துவ அலட்சியத்திற்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...