உடுமலை அருகே உயர் மின் கோபுரம் சரிந்து விழுந்து 4 பேர் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் வேடப்பட்டியில் உயர் மின் கோபுரம் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் வேடப்பட்டி பகுதியில் இன்று அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்தது. பொள்ளாச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அருகே நெய்வேலியில் இருந்து உடுமலைக்கு மின்சாரம் கொண்டு வரும் புதிய உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக உயர் மின் கோபுரம் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் கோபுரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த செல்வமாணிக்கம், பெருமாள், தங்கராஜ், சேதுபதி ஆகிய நான்கு தொழிலாளர்கள் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.



உடனடியாக அருகில் இருந்த விவசாயிகள் காயமடைந்தவர்களை மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் செய்யப்படாமல், இரவு நேரத்தில் மட்டுமே நடைபெற்று வந்ததாகத் தெரிவித்தனர். மேலும், கோபுரத்தின் கம்பிகள் தரம் குறைவாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...