நேரு கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் பி. கிருஷ்ணதாஸ் தென் இந்தியாவுக்கான மொரிஷியஸ் கவுரவ வணிக ஆணையராக நியமனம்

கோயம்புத்தூர்: நேரு கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் பி. கிருஷ்ணதாஸ் தென் இந்தியாவுக்கான மொரிஷியஸ் கவுரவ வணிக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முக்கிய பதவி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.


Coimbatore: நேரு கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் பி. கிருஷ்ணதாஸ், தென் இந்தியாவுக்கான மொரிஷியஸ் கவுரவ வணிக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முக்கிய நியமனத்தை இந்தியா மற்றும் மொரிஷியஸ் அரசுகள் அறிவித்துள்ளன.

இந்த கவுரவமிக்க பதவிக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய பொருளாதார வணிக நிறுவனம், இந்தியா ஆப்பிரிக்கா வணிக கவுன்சில் ஆகியவை பரிந்துரை செய்தன. இந்த பதவி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

ரஷ்யாவுக்கான மொரிஷியஸ் தூதுவர் பேராசிரியர் டாக்டர் கேஷ்வர் ஜன்கி, அதிகாரப்பூர்வ நியமன கடிதத்தை வழங்கினார். நியமன விழாவில் முன்னாள் அமைச்சர் முகேஷ்வர் சோனி கோஸ்க், இந்திய பொருளாதார வர்த்தக நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆசிப் இக்பால், நேரு கல்விக் குழுவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலாளர் டாக்டர் பி. கிருஷ்ணக்குமார், ஹரிநாராயணன் சுவாமிகள், நேரு கல்வி குழுமங்களின் உலகளாவிய மக்கள் தொடர்பு அதிகாரி சுரேஷ்குமார், ஊடக பிரிவு தலைவர் ரோஷன் மாத்யூ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

மொரிஷியஸின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருவுல பிரிவு, கல்வித்துறை அமைச்சர் லீலா தேவி தகூன் இந்த நியமனத்தை அங்கீகரித்தார். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியில், எஸ்எம்இ தொழில் மேம்பாடு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைச்சர் நவீனா ராம்யாத் மற்றும் உயர் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, மொரிஷியஸ் குளோபல் எஜூகேஷன் அவுட்ரீச் நிறுவனர் ஜெயசங்கர் மற்றும் நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலாளர் டாக்டர் பி கிருஷ்ணதாஸ் ஆகியோர் முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எஜூகேஷன் 4.0 திட்டத்தின்படி, கல்வியில் தொழில்நுட்ப பரிமாற்றங்களுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

மொரிஷியஸ் இந்திய (தென் இந்தியா) கவுரவ வர்த்தக ஆணையராக, டாக்டர் பி கிருஷ்ணதாஸ் இந்தியா-மொரிஷியஸ் வணிக ஒத்துழைப்புகளை வலுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் பணியாற்றுவார். பொருளாதார இணைப்புகள், வணிக பரிமாற்றங்கள், இருதரப்பு வர்த்தகங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். கல்வி, தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் முதலீட்டு திட்டங்களில் புதிய வாய்ப்புகளை ஆராய்வார்.

கண்காட்சிகள், வணிக தொடர்பு கூட்டங்கள், பொருள் மற்றும் சேவை சந்தைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மேம்பாட்டையும் மேற்பார்வையிடுவார். இரு நாடுகளுக்கும் இடையேயான வணிக பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள், ஏற்றுமதி-இறக்குமதி பயிற்சி, சந்தை நிலவரம் போன்றவற்றிலும் பங்களிப்பார். இருதரப்பு மக்கள் தொடர்புகள், வணிக வாய்ப்புகள், வணிகம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பார்.

டாக்டர் பி கிருஷ்ணதாஸ் 2009 ஆம் ஆண்டு முதல் நேரு குழுமங்களின் நிர்வாக அறங்காவலராகவும், தலைவராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 22 கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வரும் இந்த குழுமம், ஆண்டுதோறும் 20,000 மாணவர்களுக்கு கல்வி அளித்து வருகிறது. இவரது சிறப்பான கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு பணிகளுக்காக பல்வேறு விருதுகளும், அங்கீகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

வர்த்தக ஆணையராக, சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்றுமதி வர்த்தக திட்டங்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பார். இந்தியா-மொரிஷியஸ் இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...