கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து: மாநகராட்சியின் தீவிர நடவடிக்கைகள்

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி மேற்கொண்ட விரிவான நடவடிக்கைகள் குறித்த விவரங்கள். தீயணைப்பு, மீட்பு பணிகள் மற்றும் செலவினங்கள் பற்றிய தகவல்கள்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியின் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏப்ரல் 6, 2024 அன்று மாலை 5 மணியளவில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. கோடைக்காலம் மற்றும் அதிக காற்றின் வேகம் காரணமாக தீ விரைவாக பரவி, சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இருந்த குப்பைகள் எரியத் தொடங்கின.

இந்த தீ விபத்தின் காரணமாக வெள்ளலூர் சுற்றுப்புறங்களில் அதிகளவில் புகை மூட்டம் பரவியது. பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 13 தீயணைப்பு வாகனங்கள், ஒவ்வொரு வாகனத்திற்கும் 14 தீயணைப்பு வீரர்கள் வீதம் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் வழங்க, நாள் ஒன்றுக்கு 23 முதல் 42 வரையிலான தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்பட்டன. தீ உச்சம் பெற்ற 12 நாட்களில், தினமும் சுமார் 500 முதல் 600 நபர்கள் வரை சுழற்சி முறையில் பணியாற்றினர். இதில் தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் அடங்குவர்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தலின்படி, உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன் IAS, நகராட்சி நிர்வாக இயக்குநர் சு.சிவராசு IAS, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி IAS மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர்.

தீ தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டதுடன், 24 மணி நேரமும் குடிநீர், மோர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. இத்தீ தடுப்பு பணிக்காக மொத்தம் ரூ.27.52 இலட்சம் செலவிடப்பட்டது. இச்செலவினங்கள் குறித்த விவரங்கள் ஜூலை 26, 2024 அன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பார்வைக்கும் பதிவிற்கும் வைக்கப்பட்டன.

தீ தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்திய மாநகராட்சி ஆணையாளர், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாமன்றக் கூட்டத்தில் துணை மேயர், மண்டலக்குழுத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் சார்பாக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

Newsletter

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...