பொள்ளாச்சி காவல் நிலையத்தில் மதுபோதையில் தகராறு செய்த நபர் கைது

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் மதுபோதையில் மாணவிகளை அச்சுறுத்திய நபர், காவல் நிலையத்தில் DSP முன்னிலையில் தகராறு செய்து கைது செய்யப்பட்டார்.


Coimbatore: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மதுபோதையில் இருந்த வாலிபர் ஒருவர், அவ்வழியாக வரும் மாணவிகளை அச்சுறுத்தி வந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மகாலிங்கபுரம் போலீசார், அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது மகாலிங்கபுரம் காவல்நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) ஜெய்ச்சந்திரன் உள்ளிட்ட காவலர்கள் இருந்தனர்.



போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்த நபர், சட்டை இல்லாமல் "என்னை அடிங்க... அடிங்க.... என்னை ஒன்றும் செய்ய முடியாது" என ரகளையில் ஈடுபட்டு, கையில் கிடைத்த பொருளை தூக்கி வீசி தகராறில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குடிமகனின் செயலைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்ற போலீசார், ஒரு வழியாக அவரை காவல் நிலையத்துக்குள் அழைத்துச் சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள், "என்னதான் மதுபோதையில் இருந்தாலும் காவல் நிலையத்துக்குள்ளேயே இப்படியொரு அலப்பரியா..." என முகம் சுழித்து சென்றனர்.

விசாரணையில் இந்த நபர் நந்தனார் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...