முழுஅடைப்பில் தமிழகம்..! வெறிச்சோடிய கோவை..!



தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 25) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்டு அனைத்துத் தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.



விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை மாவட்டத்தில் காய்கறி மார்கெட், பழக்கடை, நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடை உள்ளிட்டு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கோவை டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம் உட்பட நகர் முழுவதும் கடைகள் மூடப்பட்டுள்ளது.



முழு அடைப்புப் போராட்டம் காரணமாக தனியார் பேருந்துகள், லாரிகள் இயங்காத காரணத்தால் கோவை மாநகர சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

மேலும், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திரையரங்குகள் மூடப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனிடையே, கோவையில் அரசுப் பேருந்துகள் மட்டும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசுப் பேருந்துகளில் பணிக்குச் செல்லும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...