கந்துவட்டி வழக்கில் காவல்துறை மீது குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பு போராட்டம்

கோவை காந்திமா நகரைச் சேர்ந்த சுசிலாவின் கந்துவட்டி வழக்கில் காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மாவட்ட பொறுப்பாளர் பிலோமினா, காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை காந்திமா நகரைச் சேர்ந்த சுசிலா என்பவர் கந்துவட்டி பிரச்சினையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் பிலோமினா மற்றும் சுசிலா ஆகியோர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்க வந்தனர்.

பிலோமினா கூறுகையில், "கந்துவட்டிக்கு பணம் கொடுத்தவருக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சுசிலா அளித்த புகார் மனு மீதான நடவடிக்கை குறித்து விசாரிக்க சென்றபோது, புகார் மனுவே இல்லை என்று காவல்துறையினர் கூறியது மிகவும் வருத்தம் அளிக்கிறது," என்றார்.

சுசிலா, MyV3 செயலியில் இணைய மறுத்ததால், கடனாக பெற்ற பணத்தை மகளின் திருமணத்திற்காக செலவழித்துள்ளார். மாதந்தோறும் ₹4,000 வட்டி செலுத்தி வந்த நிலையில், தற்போது ₹2,20,000 திருப்பி தர இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் கொடுத்தவர் சுசிலாவை தொந்தரவு செய்து, அவரது வீட்டை பூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

பிலோமினா மேலும் கூறுகையில், "காவல் நிலையங்களில் கந்துவட்டி பிரச்சனையை சட்டபூர்வமாக அணுகாமல் கட்டப்பஞ்சாயத்து மூலமாக தீர்த்து வைப்பதால் இந்த கந்துவட்டி பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுசிலாவிற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடி வருகிறோம். சரியான நீதி கிடைக்காத பட்சத்தில் காவல்துறையை முற்றுகையிடவும் தயாராக உள்ளோம்," என எச்சரித்தார்.

காவல் ஆணையரின் உத்தரவுக்குப் பிறகே சுசிலாவின் வீடு திறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளை பெண்கள் அமைப்பினர் கவனமாக கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...