கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் IAS முன்னிலையில் நடைபெற்றது.

வார்டு எண் 68க்குட்பட்ட வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 77 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இந்த மிதிவண்டிகளை மாணவர்களிடம் வழங்கினார்.



வார்டு எண் 67க்குட்பட்ட அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 73 மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் மிதிவண்டிகளை மாணவிகளிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கமலாவதி போஸ், வித்யா ராமநாதன், மாநகர கல்வி அலுவலர் குணசேகரன், உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இந்த இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரிக்கவும், அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...