வேதாத்திரி மகரிஷியின் 114வது பிறந்தநாள்: உலக அமைதி தினமாக கொண்டாட்டம்

பொள்ளாச்சி அருகே ஆழியார் அறிவு திருக்கோயிலில் வேதாத்திரி மகரிஷியின் 114வது பிறந்தநாள் உலக அமைதி தினமாக கொண்டாடப்பட்டது. தமிழருவி மணியன் சிறப்பு உரையாற்றினார். பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அறிவு திருக்கோயில் மற்றும் உலக சமுதாய சேவா சங்கத்தின் நிறுவனர் வேதாத்திரி மகரிஷியின் 114ஆவது பிறந்தநாள் இன்று உலக அமைதி தினமாக அறிவு திருக்கோயிலில் கொண்டாடப்பட்டது.



ஆழியார் அறிவு திருக்கோயில் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

முன்னாள் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் தமிழருவி மணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். "அமைதிக்கு மனவளக்கலை" என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.



தமிழருவி மணியன் தனது உரையில், "வேதாத்திரி மகரிஷி குறித்து இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உலக நாடுகளில் அமைதி நிலவ ஐநா சபையில் அனைத்து நாடுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது வேதாத்திரி மகரிஷியின் விருப்பமாகும். நாட்டில் போர் நடந்தால் சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும். அதற்காக ஜனநாயக சட்டமன்றம் அமைய வேண்டும். அதில் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், நிபுணர்கள் என அனைவரும் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

விழாவின் ஒரு பகுதியாக, முன்னாள் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன் "எளிய முறையில் யோகாசனம் செய்வது எப்படி" என்ற தலைப்பில் குஜராத் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகத்தை வெளியிட்டார்.



இந்த உலக அமைதி தின விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...