உடுமலை அருகே கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 300 விவசாயிகள் கைது

உடுமலை அருகே கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாக கூறி, 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து, 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.

கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் சார்பதிவாளர் தாமோதரன், திமுகவினர் துணையோடு தனக்கு வேண்டிய புரோக்கர்களை வைத்து பத்திரப்பதிவுக்கு வரும் விவசாயிகளையும் வீட்டு மனை பதிவுக்கு வரும் பொது மக்களையும் மிரட்டி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பத்திரபதிவுகளில் முறைகேடாகவும் ஆள்மாறாட்டம் செய்தும் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.



இந்த முறைகேடுகளுக்கு எதிராக விவசாயிகளும் பொதுமக்களும் பல கட்ட போராட்டங்களை நடத்தியும், மாவட்ட பதிவாளர், மண்டல பதிவாளர் மற்றும் தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், சார்பதிவாளர் தாமோதரன் மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விவசாயிகள், "தாமோதரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என எச்சரித்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...