மத்திய அரசு பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்கள் நியமனம் குறித்து வானதி சீனிவாசன் கருத்து

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய அரசு பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்களை நியமிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கோவை தெற்கு தொகுதி திட்டப்பணிகள் குறித்து விவாதித்தார்.



கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய அரசு பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்களை நேரடியாக நியமனம் செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதிக்கான பல்வேறு திட்டப் பணிகள் குறித்து விவாதித்தார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) மற்றும் மத்திய அரசின் இணைச் செயலாளர்களை இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் நேரடியாக நியமிப்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

வானதி சீனிவாசன் கூறுகையில், "ஒன்றிய அரசின் முக்கிய துறைகளில் திறமையானவர்களை நேரடி நியமனம் செய்கிறார்கள். இது நிரந்தர வேலையாக இல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நேரடி நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இட ஒதுக்கீடு உள்ளிட்டவை பாதிக்கப்படாது," என்றார்.

மேலும் அவர், "இந்த நாட்டின் பிரதமர், அமைச்சர்கள் என 95% பேர் ஆர்.எஸ்.எஸ் சார்ந்தவர்கள். பாஜக கட்சியின் தேசிய தலைவர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ்-ஐ சார்ந்தவர்கள். அரசாங்கத்தையே மக்கள் ஆர்.எஸ்.எஸ் பின்னணி உள்ளவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். எனவே, ஆர்.எஸ்.எஸ் சார்ந்தவர்களை உள்ளே கொண்டு வருகிறார்கள் என்ற கேள்விக்கு இடமில்லை," என்று தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...