உலக புகைப்பட தினத்தையொட்டி பொள்ளாச்சியில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

185வது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சியில் புகைப்பட கலைஞர்கள் தலைக்கவச விழிப்புணர்வு இருசக்கர பேரணி நடத்தினர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் முக்கிய சாலைகளில் பவனி வந்தன.



கோவை: 185வது உலகப் புகைப்பட தின விழா ஆகஸ்ட் 19 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, பொள்ளாச்சியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.



தமிழ்நாடு போட்டோ வீடியோ கலைஞர் தொழிற்சங்கம் மற்றும் வட்டார போக்குவரத்து துறை இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.



பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, கோவை சாலை, பாலக்காடு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்றது.



நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் பங்கேற்ற புகைப்பட கலைஞர்கள், தலைக்கவசம் அணிந்தவாறு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அண்மைக்காலமாக தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படுவதாக பேரணி ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...