உடுமலை வாகன ஓட்டுநர்கள் வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு ரூ.40,886 நிதியுதவி

உடுமலையில் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கேரளா வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு ரூ.40,886 நிதியுதவி வழங்கினர். மூன்று வாட்ஸ்அப் குழுக்கள் இணைந்து இந்த உதவியை செய்தனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

உடுமலையில் உள்ள ஸ்டார் டிரான்ஸ்போர்ட் வாட்ஸ்அப் குழு, TN 78 வாட்ஸ்அப் குழு, கே.எஸ்.டி வாட்ஸ்அப் குழு ஆகிய மூன்று குழுக்கள் இணைந்து இந்த நிதி உதவியை வழங்கியுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வாட்ஸ்அப் குழுக்களில் எழுப்பப்பட்டது.



இதனையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் மொத்தம் ரூ.40,886 நிதி திரட்டப்பட்டது. இந்தத் தொகை கேரளா மாநில முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உடுமலை பாரத ஸ்டேட் வங்கி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.



வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவு ஆறுதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...