தென் மாநிலங்களுக்கான விவசாய இயந்திரமயமாக்கல் மற்றும் நமோ ட்ரோன் திட்ட ஆய்வுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தென் மாநிலங்களுக்கான விவசாய இயந்திரமயமாக்கல் மற்றும் நமோ ட்ரோன் திட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் கூட்டு செயலாளர் திருமதி.எஸ்.ருக்மணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.


கோவை: தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான விவசாய இயந்திரமயமாக்கல் துணைத் திட்டம் (SMAM) மற்றும் நமோ ட்ரோன் திட்டம் குறித்த பிராந்திய ஆய்வுக் கூட்டம் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கூட்டு செயலாளர் திருமதி.எஸ்.ருக்மணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் அதிக எண்ணிக்கையிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மற்றும் பண்ணை இயந்திர வங்கிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், தமிழக அரசின் உழவர் செயலியை பாராட்டிய அவர், விவசாய இயந்திரமயமாக்கல் துணைத் திட்டத்தின் வழிகாட்டுதல்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் புதிய இயந்திரங்கள்/உபகரணங்கள் சேர்க்கப்பட வேண்டியவை குறித்தும் மாநிலங்களுடன் விவாதித்தார்.

தமிழக வேளாண் பொறியியல் துறையின் தலைமைப் பொறியாளர், சிறு மற்றும் குறு விவசாயிகளை சென்றடையும் வகையில் பண்ணை சக்தி கிடைக்கும் தன்மையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கூட்டு செயலாளர், மாநிலங்களில் இயந்திரமயமாக்கல் நிலையை ஆய்வு செய்யுமாறும், சென்னையில் உள்ள மாநில வேளாண் இயந்திர தகவல் தரவு மையத்திற்கு மாநில அதிகாரிகள் வருகை தருமாறும் கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் விவசாய இயந்திரமயமாக்கல் துணைத் திட்டத்தை RKVY திட்டத்திலிருந்து தனித் திட்டமாக கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.



நமோ ட்ரோன் திட்டத்தின் கீழ், ட்ரோன் பயன்பாட்டிற்கான பொருத்தமான குழுக்களை தேர்வு செய்தல், முன்னேற்றகரமான குழு அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் தீனதயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் (DAY-NRLM) கீழ் உள்ள பெண் சுய உதவிக் குழுக்களை (SHGs) தேர்வு செய்தல், ட்ரோன் பைலட் மற்றும் ட்ரோன் உதவியாளர் பயிற்சிக்கான பெண் சுய உதவிக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்தல், மாவட்ட வாரியாக ட்ரோன் பயன்பாடு-கிடைக்கும் தன்மை மற்றும் எதிர்கால தேவைகளை மதிப்பீடு செய்தல், முன்னணி உர நிறுவனங்கள் (LFC) மற்றும் பூச்சிக்கொல்லி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேர்வு செய்யப்பட்ட பெண் சுய உதவிக் குழுக்களுக்கு வணிக வாய்ப்புகளை உறுதி செய்தல் போன்றவற்றை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டு செயலாளர் வலியுறுத்தினார்.



மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் தென் மாநில அதிகாரிகள் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டத்தில் உள்ள விவசாயி நிலத்தில் நிறுவப்பட்டுள்ள சூரிய சக்தி வேலி மற்றும் சூரிய உலர்த்தி அலகு ஆகியவற்றை பார்வையிட்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...