பொள்ளாச்சி அருகே இலங்கை தமிழர் குடியிருப்புகள் இடியும் நிலை: சார் ஆட்சியரிடம் முறையீடு

பொள்ளாச்சி அருகே கோட்டூர் மற்றும் ஆழியாறு அணை பகுதியில் 30 ஆண்டுகளாக வசிக்கும் இலங்கை தமிழர்கள், சிதிலமடைந்த குடியிருப்புகளால் பாதுகாப்பின்றி வாழ்வதாக சார் ஆட்சியரிடம் முறையீடு செய்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மற்றும் ஆழியாறு அணை பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரியத் துறைக்குச் சொந்தமான குடியிருப்புகளில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 30 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

இந்தக் குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்தும், சிதிலமடைந்தும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் உயிருக்கு அச்சம் கொண்டு வாழ்ந்து வருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், நடவடிக்கை எடுக்கக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்கள் குடும்பத்தினருடன் மனு அளித்தனர். சுமார் 30 ஆண்டுகளாக மறுவாழ்வு முகாமில் வசிக்கும் தங்களுக்கு அரசு எவ்விதமான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டனர்.

குடியிருப்புகள் அனைத்தும் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாகவும், அவற்றை சீரமைத்துத் தரக் கோரி பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் முறையிட்டனர். இந்த நிலையில், மாற்று குடியிருப்புகளை கட்டித் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...