கோவை அரசு கலைக்கல்லூரிக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தன்னாட்சி அதிகாரம் நீட்டிப்பு

கோவை அரசு கலைக்கல்லூரிக்கு பல்கலைக்கழக மானியக்குழு 2023 முதல் 2027 வரை தன்னாட்சி அதிகாரத்தை நீட்டித்துள்ளது. கல்லூரி நிர்வாகம் விண்ணப்பித்ததையடுத்து, ஆய்வுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையின் மிகப் பழமையான கல்வி நிறுவனமான அரசு கலைக்கல்லூரிக்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தன்னாட்சி அதிகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

1852ம் ஆண்டு தொடங்கப்பட்ட கோவை அரசு கலைக்கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ளது. இக்கல்லூரி 1987ம் ஆண்டு முதல் தன்னாட்சி பெற்ற கல்லூரியாக இயங்கி வருகிறது. கல்லூரிகளுக்கு வழங்கப்படும் தன்னாட்சி அதிகாரம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பல்கலை கழக மானியக் குழுவால் நீட்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு கலைக்கல்லூரியின் தன்னாட்சி அதிகாரம் 2023ம் கல்வியாண்டில் முடிவுற்ற நிலையில், கல்லூரி நிர்வாகம் தன்னாட்சி நீட்டிப்பு வேண்டி பல்கலைக்கழக மானிய குழுவிடம் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பித்தது. கல்லூரியின் தன்னாட்சி சார்ந்த பணிகளை ஆய்வு செய்த பல்கலைக்கழக மானியக்குழு, 2023ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு முடிய மேலும் ஐந்தாண்டுகளுக்கு அரசு கலைக்கல்லூரியின் தன்னாட்சி அதிகாரத்தை நீட்டித்து ஆணையிட்டுள்ளது.

தன்னாட்சி அதிகாரம் நீட்டிப்பு ஆணை பெறப்பட்டதை தொடர்ந்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் செல்வராஜ், பேராசிரியர்கள், நிதியாளர் மற்றும் அனைத்து பணியாளர்களும் பூங்கொத்து அளித்து முதல்வர் முனைவர் எழிலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...