அன்னூர் சிறப்பு நிலைப்பேரூராட்சியில் நீலகிரி எம்பி ஆ.ராசா பல்வேறு வளர்ச்சி பணிகளைத் தொடங்கி வைத்தார்

கோவை மாவட்டம் அன்னூர் சிறப்பு நிலைப்பேரூராட்சியில் நீலகிரி எம்பி ஆ.ராசா புதிய பேரூராட்சி மன்ற அலுவலகம், தார் சாலை, மின்கல வாகனம், டிப்பர் லாரி மற்றும் மேல்நிலைத் தொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை செப்டம்பர் 1 அன்று தொடங்கி வைத்தார்.


Coimbatore: கோவை மாவட்டம், அன்னூர் சிறப்பு நிலைப்பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செப்டம்பர் 1 அன்று தொடங்கி வைத்தார். புதிய பேரூராட்சி மன்ற அலுவலகம் கட்டுதல், புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகள், புதிய மின்கல வாகனம், டிப்பர் லாரி போன்ற புதிய திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அவர் துவக்கி வைத்தார்.

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மூன்று இடங்களில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆ.ராசா தொடங்கி வைத்தார். வார்டு எண் 9, கண்ணம்மாள் சுப்பையா நகர் பகுதியில் ரூ.16.75 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.



வார்டு எண் 15, காளியாபுரம் பகுதியில் ரூ.16.75 இலட்சம் மதிப்பீட்டில் மற்றொரு மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 2, அல்லிகுளம் பகுதியில் ரூ.16.75 இலட்சம் மதிப்பீட்டில் மூன்றாவது மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.



இந்த வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த பின்னர், நீலகிரி எம்பி ஆ.ராசா வாக்காளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட கழகச் செயலாளர் தொ.ஆ.இரவி, அன்னூர் பேரூராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரன் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...