கோவையில் மாவட்ட அளவிலான கோ கோ போட்டி: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவையில் இரத்தினபுரி கோ கோ கிளப் சார்பாக மாவட்ட அளவிலான கோ கோ போட்டி நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



Coimbatore: கோவை இரத்தினபுரி கோ கோ கிளப் சார்பாக மாவட்ட அளவிலான கோ கோ போட்டி, கவுண்டர் மில் பகுதியில் உள்ள புனித ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

போட்டி துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக சென்ட்ரல் எக்சைஸ் மற்றும் ஜிஎஸ்டி சூப்ரிடெண்ட் ஸ்னேகா பிரின்ஸி கலந்து கொண்டு போட்டியைத் துவக்கி வைத்தார். கவுரவ அழைப்பாளராக புனித ஜான் போஸ்கோ பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் ஆயர் பிச்சை ராபர்ட் கலந்து கொண்டார்.



14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் என தனித்தனி பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாணவர் பிரிவில் என்.ஜி.ஆர். பள்ளி முதலிடத்தைப் பிடித்து கோப்பையைக் கைப்பற்றியது. இரண்டாவது இடத்தை ஜான் போஸ்கோ பள்ளியும், மூன்றாம் இடத்தை டி.கே.எஸ். பள்ளியும், நான்காம் இடத்தை மதுக்கரை பிருந்தாவன் பள்ளியும் பிடித்தன.

மாணவிகள் பிரிவில், சுகுணா பிப் பள்ளி முதலிடத்தைப் பிடித்து கோப்பையைக் கைப்பற்றியது. இரண்டாம் இடத்தை விவேக் வித்யாலயா, மூன்றாம் இடத்தை என்.ஜி.ஆர். பள்ளி, நான்காம் இடத்தை கவுண்டம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகியவை பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்து விளையாடிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை இரத்தினபுரி கோ கோ கிளப் நிர்வாகிகள் பிரின்ஸ் லீன் ரூபன், பிரகாஷ், மதன் குமார், தர்மபிரபு, கவுதம், ராம்குமார் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...