பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் திமுக பேரூராட்சித் தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் திமுக பேரூராட்சித் தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டூர் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக சார்ந்த பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே, பேரூராட்சித் தலைவர் ராமகிருஷ்ணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. அவர் தன்னிச்சையாக செயல்பட்டு ஊழல் செய்து வருவதாகவும், சரியான முறையில் வரவு செலவு கணக்குகளை காட்டுவதில்லை என்றும், பேரூராட்சிக்கு மக்கள் நல பணிகளுக்காக அரசு ஒதுக்கும் நிதியில் ஊழல் செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து, திமுக பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்தனர்.

இந்த சம்பவம் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெளிநடப்பு செய்த திமுக வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் வரி என்ற பெயரில் அதிகமாக வசூல் செய்து குறைவாக கணக்கு காட்டுவதாகவும், அரசு வழங்கும் நிதியை முறைகேடாக பயன்படுத்தி ஊழல் செய்வதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும், இது தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அதனால் பேரூராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாகவும் திமுக வார்டு கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் உள்ளூர் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...