பெரிய நெகமத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் பொள்ளாச்சி எம்பி கே.ஈஸ்வரசாமி

கோவை மாவட்டம் பெரிய நெகமத்தில் ரூ.90 லட்சத்திற்கும் மேலான மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பொள்ளாச்சி எம்பி கே.ஈஸ்வரசாமி தொடங்கி வைத்தார். சாலைப் பணிகள், சுகாதார நிலையம் மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


Coimbatore: கோவை மாவட்டம் பெரிய நெகமத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி செப்டம்பர் 16 அன்று தொடங்கி வைத்தார்.

ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் பெரிய நெகமம், பல்லடம் சாலை - சந்திராபுரம் சாலை இணைப்பு சாலைக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்பி கே.ஈஸ்வரசாமி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



இதேபோல, பெரிய நெகமம், காளியப்பன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் இருந்து வாய்க்கால் மேடு வரை சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியும் நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்டம், நெகமம் பேரூர் கழக பகுதியில் ரூ.72 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நெகமம் பல்லடம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் கே.வி.கே ரெசிடென்சியில் சிறுவர் பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியையும் எம்பி கே.ஈஸ்வரசாமி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...