கோவையில் இருந்து அபுதாபிக்கான இண்டிகோ நேரடி விமான சேவை அட்டவணை மாற்றம்

கோவையில் இருந்து அபுதாபிக்கான இண்டிகோ நேரடி விமான சேவை அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அட்டவணை படி, கோவையில் இருந்து அபுதாபி செல்லும் விமானம் காலை 10:40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:40 மணிக்கு சென்றடையும்.


கோவை: கோவையில் இருந்து அபுதாபிக்கான இண்டிகோ நேரடி விமான சேவை அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



புதிய அட்டவணை படி, கோவையில் இருந்து அபுதாபி செல்லும் விமானம் காலை 10:40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:40 மணிக்கு சென்றடையும்.



ஆனால், அபுதாபியில் இருந்து கோவை வரும் விமான நேரம் மாற்றமின்றி அதிகாலை 1:05 மணிக்கு புறப்பட்டு காலை 6:35 மணிக்கு வந்தடையும்.

இண்டிகோ விமான நிறுவனம் நவம்பர் மாதம் முதல் மார்ச் 2025 வரை டிக்கெட் முன்பதிவுகளை தொடங்கியுள்ளது. இந்த சேவை குளிர்கால அட்டவணையில் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர்கால அட்டவணை அக்டோபர் 29 முதல் மார்ச் 30 வரை நடைமுறையில் இருக்கும் என இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அறிவித்துள்ளது.

மேலும், இண்டிகோ விமான நிறுவனம் அக்டோபர் 27 முதல் கோவைக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தினசரி நேரடி விமான சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, கோவையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் இரவு 8:15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:15 மணிக்கு சிங்கப்பூரை சென்றடையும். திரும்பும் விமானம் சிங்கப்பூரில் இருந்து மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:10 மணிக்கு கோவையை வந்தடையும்.

கோவையில் இருந்து சிங்கப்பூருக்கான நேரடி விமான சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், கோவையில் இருந்து மற்ற சில சர்வதேச நாடுகளுக்கும் இண்டிகோ விமான சேவையை விரைவில் தொடங்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...