கோவையில் மத நல்லிணக்க மிலாடி நபி விழா: அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து கொண்டாட்டம்

கோவையில் பல் சமய நல்லுறவு இயக்கம் ஏற்பாடு செய்த மத நல்லிணக்க மிலாடி நபி விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர். உலக அமைதிக்காக பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.



Coimbatore: கோவையில் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக, அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து மத நல்லிணக்க மிலாடி நபி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முஸ்லீம்கள், இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது. மேலும், உலக மக்களின் அமைதி மற்றும் நலனுக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.



விழாவில் இஸ்லாமிய குருமார்கள், பேரூர் மடாதிபதி தம்புரான் உள்ளிட்ட இந்து சமூக பிரதிநிதிகள், குருத்துவார் தரப்பில் டோனி சிங் உள்ளிட்ட பல்வேறு மத பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய மத பிரதிநிதிகள், "நாட்டில் வெவ்வேறு மதங்களாக மக்கள் இருந்தாலும் அனைவரும் ஒன்று" என்று வலியுறுத்தினர்.

பல் சமய நல்லோர் இயக்கத்தின் தலைவர் முகமது ரபி பேசுகையில், "தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி முதன் முறையாக மிலாடி நபிக்கு விடுமுறை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மிலாடி நபிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு பல்வேறு உதவிகளை கலைஞர் மற்றும் திராவிட மாடல் ஆட்சியினர் செய்து வருகின்றனர்" என்று நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், எதிர்காலத்திலும் அனைத்து மத விழாக்களையும், பண்டிகைகளையும் மத நல்லிணக்க விழாவாக கொண்டாடுவதாக உறுதியளித்தனர். மேலும், நாட்டில் பிளவு வாத சக்திகளுக்கு இடமில்லை என்றும், மதங்கள் வேறாயினும் அனைவரும் ஒரே மனதுடன் நல்லிணக்கம் பேணி வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...