கொடநாடு காவலாளி கொலை குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்.பி முரளிரம்பா பேட்டி

கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஆதாரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் உதகை எஸ்.பி முரளிரம்பா கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சயான் என்பவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் சுந்தர்ராஜனிடம் சயான் உடல் நிலை குறித்து கேட்டறிந்த எஸ்.பி முரளிரம்பா பின்னர், சயானிடம் விசாரணை நடத்தினார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சயானிடம் எஸ்.பி முரளிரம்பா விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரளிரம்பா கூறுகையில், முதலில் சயானின் உயிர் மிகவும் முக்கியம். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சையில் சயான் முழு நினைவுடன் நலமுடன் உள்ளார்.

விசாரணையின் போது அவர் மெதுவாக பேசினார். முழு விசாரணைக்கு ஏற்றபடி அவர் உடல்நலம் இல்லை. அதே வேளையில் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழில் நுட்ப ரீதியாகவும் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என முரளிரம்பா கூறினார்.

இதைத்தொடர்ந்து, சயானை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டது ஏன் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, சயானை கேரள போக்குவரத்துக் காவல்துறைதான் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்" என்றார். கூடலூரைச் சேர்ந்த சஞ்சீவன் என்பவருக்கும் இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கின்றதா என்ற கேள்விக்கு பதிலளிக்க முரளிரம்பா மறுத்து விட்டார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...